Say R.I.P for the R.I.P
08 Jan 2026
ஒத்துக்கொள்கிறேன்,அவசரமான வாழ்க்கைதான் ,பூமியை விட வேகமாக சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் ஒரு நிமிடம் நண்பர்களே! அந்த சுழற்சியின் அச்சாணியே குடும்பம் ,பந்தம்,உறவுகள்தானே.
சில உறவுகள் எம் வாழ்க்கைக்கான அத்திவாரம்,சில உறவுகள் வழிகாட்டும் தூண்கள், சில உறவுகள் எம் வாழ்க்கையின் முன்னோடிகள்.
ஆகவேதான் அப்படிப்பட்டவர்களின் வாழ்வு நிறைவுறும் போது அவர்கள் நம் வாழ்வில் ஏற்படுத்திய நினைவுகளை நினைத்திடக் கடமைப்பட்டுள்ளோம்.
எழுதிவிட்டால் துயர் தொலைந்துவிடுமா ? எழுதித்தான் பாருங்களேன் , பிரிவின் வலி விலகி நிறைவான நினைவுகள் நெஞ்சுக்குள் புகுந்து கொள்ளும்.பொருளைத் தேடி ஓடும் பயணத்தில் தொலைந்த மனிதமும் திரும்பி வரும்.நீங்கள் எழுதும் கதைகள் ,வாழ்வுக்கான அர்த்தத்தை அடுத்த சந்ததிக்கு வழங்கும் கல்வெட்டாக மாறும்.